முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் நாடாளுமன்ற உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கான பிரேரணை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை இலங்கைக்குள் கொண்டு வந்தமைக்காக அபராதம் விதிக்கப்பட்ட அலி சப்ரி ரஹீம் நாடாளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைக் குழுவின் விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை குழுப் பிரதிநிதித்துவத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை தொடர்பில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதால் குறித்த விசாரணைகள் நிறைவடையும் வரை குற்றம் சாட்டப்பட்ட உறுப்பினரின் குழுவின் பிரதிநிதித்துவத்தை இடைநிறுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார். அத்துடன் அலி சப்ரி ரஹீமுக்கு குறைந்த அபராதம் விதித்தமை தொடர்பில் ஆராயுமாறும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் நாடாளுமன்றத்தில் இருக்கக் கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.