ஐ.பி.எல் 2026ஆம் ஆண்டுக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் டிசம்பர் 13 முதல் 15 ஆம் திகதிக்குள் நடைபெறக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீரர்கள் ஏலம் தொடர்பாக அணிகளின் உரிமையாளர்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை நிர்வாகிகளிடம் பேசி உள்ளதாகவும் ஆனால் ஐ.பி.எல் நிர்வாகம் இதுவரை இதுதொடர்பாக எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இம்முறை ஏலம் வெளிநாட்டில் நடைபெறுமா? என்பதும் தொடர்பிலும் தெரிவிக்கப்படவில்லை. கடந்த இரு ஆண்டுகளாக ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் வெளிநாடுகளில் நடத்தப்பட்டன. இருப்பினும் வீரர்களை தக்கவைத்துக் கொள்ளவும், விடுவிப்பதற்கான கடைசி திகதி நவம்பர் 15 ஆக இருக்கக்கூடும். அதற்குள் விடுவிக்க முடிவு செய்துள்ள வீரர்களின் பட்டியலை அணிகளின் உரிமையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
கடந்த பருவத்தில் கடைசி இரு இடங்களைப் பிடித்த சென்னை சுப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகளைத் தவிர மற்ற அணிகள் பெரிய அளவிலான மாற்றங்களை மேற்கொள்ள வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறமை சுட்டிக்காட்டத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.