திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பகுதியில் பழைய இரும்பு கழிவு பொருட்களை கொண்டு ஒருவர் பல இயந்திரங்களை உருவாக்கியுள்ளார்.
தம்பலகாமம் 99 ம் கட்டை மீரா நகர் பகுதியைச் சேர்ந்த ஏ.பி . அன்வர் என்பவரே இவ்வாறு பல்வேறு வகையான இயந்திரங்களை கண்டுபிடித்துள்ளார்.
சுமார் 16 வருடங்களாக இத்தொழிலை செய்து வருவதாகவும் 2009 ம் ஆண்டு பல சாதனைகள் பத்திரிகையில் வெளிவந்த போதும் பண வசதி இல்லாமையினால் தன்னுடைய சாதனைகள் முடங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கமோ அல்லது தனியார் நிறுவனமோ எனக்கு நிதி உதவி செய்யுமாக இருந்தால் இன்னும் பல இயந்திரங்களை கண்டுபிடிக்க முடியும் எனவும் இவ்விடயங்களுக்கு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.