யாழ் மாநகரசபையின் முதல்வர் தொரிவு கோரம் இல்லாததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யாழ் மாநகரசபையின் எஞ்சியுள்ள பதவிக்காலமானது 9தினங்களுக்கு புதிய இடைக்கால முதல்வரை தெரிவுத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்றைய தினம் வடமாகண உள்ளூராட்சி ஆணையாளர் பிரணவநாதன் தலைமையில் இடம்பெற்றது.
45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ் மாநகரசபையில் ஒரு உறுப்பினர் உயிரோடு இல்லாத காரணத்தினால் மீதி 44 உறுப்பினர்களில் 22பேர் மாத்திரம் கூட்டத்திற்கு வந்தால் மாத்திரம் கூட்டத்தை நடாத்தி புதிய முதல்வரை தெரிவு செய்ய முடியும்.
இந்த நிலையில் 18 மாநகரசபை உறுப்பினர்கள் மாத்திரம் பற்கேற்ற நிலையில் கூட்டத்திற்கான கோரம் இல்லாததால் வாக்கெடுப்பு அரை மணித்தியாளங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனடிப்படையில் முன்னால் மாநகசபை முதல்வர் இம்மானுவல் ஆல்னோல்ட் பெப்பவரி28 சமர்ப்பித்த 2003ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பிலும் அது பெரும்பான்மை இல்லாத்தால் தோற்கடிக்கப்பட்டு பதவி இழந்தார்.
அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் இன்று வெள்ளிக்கிழமை கூட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடப்பட்டிருந்தது.
அதேநேரம் 2023க்கான வரவு-செலவுத் திட்டம் இதுவரைக்கும் அங்கீகரிக்கப்படாத நிலையிலும் முதல்வர் ஒருவர் பதவியில் இல்லாத காரணத்தாலும் பிரதி முதல்வர் து.ஈசன் கடந்த 1ஆந்திகதி முதல் எதிர்வரும்14ஆந் திகதி வரை அத்தியாவசிய செலவீனங்களை மேற்கொள்வதற்கு ஆளுநரால் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதல்வர் தெரிவானது இடம்பெறாத நிலையில் எதிர்வரும் மார்ச்19 வரை சபையின் நீடிப்பிற்கான பதவிக்கால நிறைவு வரை சபையின் பிரதி முதல்வரே சபையைக் கொண்டு நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.