கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவப் பெருவிழா தொடர்பான கலந்துரையாடல் ஒன்று புளியம்பொக்கணை ஆலய முன்றலில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
பங்குனி உத்திர பொங்கல் விழா, எதிர்வரும் 29ஆந் திகதி புதன்கிழமை விளக்கு வைப்புடன் ஆரம்பமாகவுள்ளது. விசேட பூசை நிகழ்வுகள் நடைபெற்று பிரம்பு வழங்குதல் வைபவம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் மாலை பாரம்பரிய முறையில் மாட்டுவண்டில்களில் பிரம்பு ஆலயத்திலிருந்து எடுத்துச் செல்லப்படும். மறுநாள் 30ஆந் திகதி வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் மீசாலை புத்தூர் சந்தி பண்டமரவடியைச் சென்றடைந்து விசேட பூசைகளும் நடைபெறும். மீண்டும் ஏப்ரல் மாதம் 4ஆந் திகதி செவ்வாய்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மடைப்பண்டம் புறப்பட்டு 5ஆந் திகதி புதன்கிழமை மாலை 6 மணியளவில் நாகதம்பிரான் ஆலயத்தை வந்தடையும். அன்றையதினம் பகல் மற்றும் இரவு வேளைகளில் பொங்கல் நிகழ்வுகள் நடைபெறும் போன்ற விடயங்கள் கலந்துரயாடலில் தெரிவிக்கப்பட்டன.
கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டச்செயலர் ரூபவதி கேதீஸ்வரன், கண்டாவளைப் பிரதேசசெயலர் பிருந்தாகரன், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், ஆலய நிர்வாகத்தினர், கிளிநொச்சி மாவட்ட சுகாதார மருத்துவ அதிகாரி, சுகாதாரப் பரிசோதகர் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.