எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற திருத்த வேலை காரணமாக பெற்றோல் வழங்க மறுத்ததால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள் வந்த இருவர் மிரட்டல் விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே இந்தச் சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
நாவற்குழி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றது போன்றதொரு சம்பவம் தங்களுக்கும் இடம்பெறும் எனவும் அவர்கள் இதன்போது மிரட்டல் விடுத்ததாக எரிபொருள் நிலைய முகாமையாளர் தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.