1.தர்மம் வகுத்த வழியில் பணம் சம்பாதியுங்கள். வேதம் விதித்த வழியில் வாழ்க்கை நடத்துங்கள்.
2. தர்மத்தின் மீது சிறிதும் சந்தேகம் கொள்வது கூடாது. அதுவே ஒரு மனிதன் கல்வி கற்றதன் அடையாளம்.
3. பக்தி ஒளி இருக்கும் மனதில் அறியாமை என்னும் இருள் இருப்பதில்லை. பதவி சாதிக்க முடியாததைக் கூட பக்தியால் சாதிக்க முடியும்.
4. பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் இருப்பதே உண்மையான விரதம். பிறருக்குத் தீமை செய்யாத எந்தத் தொழிலும் உயர்வானதாகும்.
5. கடவுளுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்ப கட்டம். ஞானம் முதிரும் போது பயம் அன்பாக மாறுகிறது. பூரண அன்பு நம் மனதில் பரிணமிக்கும் போது, பயம் முற்றிலுமாக நம்மை விட்டு நீங்கிவி டுகிறது.
6. புலன்களின் ஆதிக்கத்தில் அடங்கி நடக்கும் வாழ்க்கை உலக சம்பந்தமானது. புலன்களை நம் ஆதிக்கத்தில் கொண்டுவந்து அடக்கி வாழும் வாழ்க்கை ஆன்மிக சம்பந்தமானது.
7. நல்ல எண்ணங்கள் நல்ல மனிதனை உருவாக்குகின்றன. கெட்ட எண்ணங்கள் மனிதனையே அழித்து விடுகின்றன. தர்மம் இருக்குமிடத்தில் எல்லா நன்மையும் உண்டாகும்.
8. கடவுளுக்கு படைத்த உணவை உண்பதால் மனத்தூய்மை ஏற்படும்.
9. பற்றற்றவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும். உள்ளப்பற்றுகளை எல்லாம் துறந்துவிடுவதற்கு அப்பற்றைப்பற்ற வேண்டும்.
10. மக்கள் அனைவருமே நாராயணர்களே என்பதை அனுபவம் மூலம் உணர்ந்து கொள்வது தான் ஆன்மிகம்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.