யோகி.
கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் கண் சத்திர சிகிச்சையில் பங்காற்றிய மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழாவை கிளிநொச்சி மருத்துவமனையின் நோயாளிகள் நலச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
இவ் பாராட்டு நிகழ்வின் போது மருத்துவமனைக்கு பல லட்சம் பெறுமதியான மாத்திரைகள் பொதி செய்யும் இயந்திரம் மற்றும் ஆறு சக்கர நாற்காலிகள் என்பன நன்கொடை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் மருத்துவமனையின் பணிப்பாளர், மாகாண விவசாய திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், நோயார் நலன்புரி சங்கத்தின் தலைவர், முன்னாள் பிரதி கல்வி பணிப்பாளர், மருத்துவர்கள் மற்றும் பாடசாலை முதல்வர்கள் என பலரும் கலந்து கொண்டனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.