நடப்பு ஐ.பி.எல் தொடரில் 4 முக்கிய விருதுகளை தமிழக வீரரான சாய் சுதர்சன் தட்டிச்சென்று சாதனை படைத்துள்ளார்.
நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று பெங்களூர் அணி முதன் முறையாக கோப்பையை வென்றுள்ளது. இதனையடுத்து நடப்பு ஐ.பி.எல் சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில், குஜராத் அணியை சேர்ந்த சாய் சுதர்சன் 4 விருதுகளை வென்று அசத்தியுள்ளார்.
அந்தவகையில் நடப்பு ஐ.பி.எல் சீசனில் 759 ஓட்டங்களைக் குவித்து ஓரஞ்ச் கோப்பையை கைப்பற்றிய சாய் சுதர்சன், 88 பவுண்டரிகள் அடித்து அதிக நான்கு ஓட்டங்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து ரூபே ஆன் தி போர்ஸ் ஆப் தி சீசன் விருதையும் வென்றுள்ளார்.
மேலும், வளர்ந்து வரும் வீரருக்கு வழங்கப்படும் எமெர்ஜிங் வீரருக்கான விருதையும் வென்ற அவர், 1495 பேண்டசி புள்ளிகள் பெற்று பேண்டசி கிங் விருதையும் தட்டிச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.