கனடாவில் பொலிஸ் வேடத்தில் குழு ஒன்றால் வீடு புகுந்து கடத்தப்பட்ட பெண் தொடர்பில், ஓராண்டுக்கு பின்னரும் நம்பிக்கையுடன் இருப்பதாக பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2022 ஜனவரி 12ம் திகதி Elnaz Hajtamiri என்ற 37 வயது பெண் கடத்தப்பட்டார். சம்பவம் நடந்து ஓராண்டு கடந்தும் துப்புத் துலங்காமல் உள்ளது இந்த விவகாரம்.
Elnaz Hajtamiri மாயமான அன்று முதல் துயரத்தில் இருந்து மீளவில்லை என கூறும் குடும்பத்தினர், அவர் இன்னமும் உயிருடன் இருக்கிறார் என்றே நம்புவதாக தெரிவித்துள்ளனர். ஒருநாள் அவரை உயிருடன் பார்ப்போம் எனவும் உறுதியுடன் கூறுகின்றனர்.
ஒன்ராறியோ பிராந்திய பொலிசார் இந்த விவகாரம் தொடர்பில் விசாரித்து வருகின்ரனர். மட்டுமின்றி, பொதுமக்களிடம் உதவியும் கோரியுள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.