(யோகி)
இரனைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தினர் இன்றைய தினம் (10.01.2024) ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர் ஊடக சந்திப்பின் போது அவர்கள் தெரிவிக்கையில் கடந்த வாரம் கிளிநொச்சி பகுதிக்கு வருகைதந்த அரசதலைவர் ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சி மாவட்ட கமக்கார அமைப்புகளில் சம்மேளனத்தினரையும் அழைத்து இருந்தார் தாமும் தற்பொழுது விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பல்வேறு விதமான விடயங்களை கதைப்பதற்காக அங்கு சென்றிருந்த பொழுது எவருமே அரசதலைவரிடம் தமது விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக கதைப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை எனவும் அப்படி இருக்கையில் எதற்காக அரசதலைவர் எம்மை அழைத்தீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளனர் அத்துடன் மேலும் தெரிவிக்கையில் கடந்த வருடங்களை விட இவ்வருடம் பல்வேறு வகையிலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வருடம் பெரும்போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்ட சில நாட்கள் மழையின்றி தண்ணீர் இன்றி பெரிதும் அவதி உற்றதாகவும் பின்னர் மடிச்சு கட்டி நோய் தாக்கம் காரணமாகவும் தத்தி நோய் தாக்கம் காரணமாகவும் நெற்செய்கையில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் பின்னர் தற்பொழுது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பலரது விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பேரழிவை ஏற்படுத்தி உள்ளதாகவும் இதற்கு விவசாயக்காப்புறுதி திணைக்களம் இதுவரையில் அழிவு தொடர்பாக பார்வையிட வில்லை எனவும் அப்படி அலிவு ஏற்பட்டிருந்தால் அதற்கு விவசாயக்காப்புறுதி பெற்றிருந்தால் மாத்திரமே அழிவுக்காண கொடுப்பனவு கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மேலும் தெரிவிக்கையில் தற்பொழுது பெரும் போக அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஏக்கர் ஒன்றுக்கு 12 மூட்டைகள் மாத்திரமே அறுவடை செய்யப்பட்டு வருவதாகவும் இந்நிலை தொடரும் ஆயின் விவசாய செய்கையை விட்டு வேறு தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர் எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் விவசாயிகளையும் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.
#uthayannews #newsupdate #todaybreaking #newsupdate #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.