யோகி.
கிளிநொச்சி உமையாள்புரத்தில் இன்று புதன்கிழமை(24) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் 8 மாடுகளும் உயிரிழந்துள்ளன.
யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்து வீதியில் பயணித்த மாடுகளுடன் மோதி பின் கொழும்பியிருந்து யாழ்ப்பாணம் நோக்கி எதிரே பயணித்த மகிழுந்து மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் வவுனியாவை சேர்ந்த 50 வயதுடைய திருமணி திருச்செல்வம் என்பவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் காயமடைந்தவர்களில் ஐவர் கிளிநொச்சி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.