யோகி.
புதிதாக பதவியேற்ற யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க கிளிநொச்சி மாவட்ட செயலர் றூபவதி கேதீஸ்வரனை இன்று திங்கட்கிழமை(29) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இன்று காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில் பொதுவான பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தின் நிலை மற்றும் மாவட்டத்திலுள்ள பாதுகாப்பு படைகள் வழங்குகின்ற ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்கள் என்பன கலந்துரையாடப்பட்டன.
மேலும், குறித்த சந்திப்பின் இறுதியில் கிளிநொச்சி மாவட்ட செயலருக்கு யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதியினால் நினைவுப் பரிசிலும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.