(யோகி)
பாதுகாப்பு கடவையை கடக்க முற்பட்ட குடும்பத்தலைவர் தொடருந்து மோதுண்டதில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் (02)இன்று பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி டிப்போ வீதியில் தொடருந்து நிலையத்துக்கு அண்மித்துள்ள பாதுகாப்பான தொடருந்து கடவை மூடப்பட்ட நிலையில், குறித்த கடவையை கடக்க முற்பட்டவரையே தொடருந்து மோதியுள்ளது.
விபத்தில் 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.