யோகி.
தருமபுர காவல்துறை பிரிவுக்குட்பட்ட கோரை மூட்டையில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபரை தருமபுர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்று திங்கட்கிழமை (05) குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிந்து 2468 போத்தல் கோடாவும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபர் இன்று செவ்வாய்க்கிழமை(06) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பின் பினையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் காவல்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.