(புதியவன்)
முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளிகளுக்கான ஸ்டிக்கர் ஒட்டும் பணி தருமபுரம் காவல்நிலையத்தில் இன்று (24) நடைபெற்றது.
கிளிநொச்சி, தர்மபுரம் காவல்நிலையத்தின் ஏற்பாட்டில் அக் காவல்துறை பிரிவிற்குட்பட்ட முச்சக்கரவண்டி மற்றும் உந்துருளிகளுக்கான ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, முச்சக்கர வண்டிகளுக்கான ஸ்டிக்கருக்காக 400 ரூபாவும், உந்துருளிகளுக்கான கட்டணமாக 250 ரூபாவும் அறவிடப்பட்டு இவர்களுக்கான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.
குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்காகவும், வீதி விபத்துக்கள் மற்றும் குற்ற செயல்களை இலகுவாக இனம் காண்பதற்காகவும் ஒட்டப்படுவதாகவும், குற்ற செயல்களை இலகுவாக அடையாளம் காண்பதற்கு இது ஏதுவாக அமையும் எனவும், இதனால் பாரிய அளவிலான குற்றச் செயல்கள் மற்றும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.