முன்னாள் கரைச்சி பிரதேச சபையின் பிரதேச சபை உறுப்பினர் சண்முகம் ஜீவராசா அவர்கள் ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டு இருந்தார். இதன் போது ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் பல்வேறு வீதிகள் காணப்படுவதாகவும், அவ்வீதிகள் புனரமைப்பு என்ற போர்வையில் பெயர் பலகை இடுவதும், அடிக்கல் நாட்டபட்டு வைக்கப்படுவதுமே நடைபெற்று வருவதாகவும் ,உண்மையில் ஒரு விதி கூட இதுவரையில் முழுமையாக புனரமைக்கப்படவில்லை, எனவும் இதன் காரணமாக வீதிகளில் பயன்படுத்தும் மக்கள் பூநகரி வகைப்பாடு கிராஞ்சி பொன்னாவெளி பகுதிகளில் உள்ள வீதிகளும் மற்றும் சுண்டுக்குளம் பிரதான வீதி கல்மடுநகர் மற்றும் தர்மபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள வீதிகளில் இவ்வாறு மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் குன்றும் குழியுமாக உள்ளது.
இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள், அவசர தேவை கருதி வைத்தியசாலை செல்பவர்கள் கூட மிகவும் சிரமப்படுவதாகவும் இவ்விதிகள் சீராக இல்லாத தனியார் போருந்துகளே செல்லமுடியாத நிலையில் காணப்படுவதாகவும் தயவு கூர்ந்து இதனை கவனத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.