முல்லைத்தீவு - கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் அமைந்துள்ள புத்தர் சிலை ஒன்றினை சேதப்படுத்திய சந்தேகத்தில் ஒருவரை கொக்கிளாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (01.05.2023) கொக்கிளாய் - முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொக்குளாய் மேற்கு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள முகத்துவாரம் பகுதியில் பெரும்பான்மை மக்களால் வணங்கப்பட்டு வந்த புத்தர் கோவில் ஒன்றில் இருந்த புத்தர் சிலை உடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கொக்குளாய் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
பொலிஸாரால் கைது
இதன்போது 1.5 அடி உயரம் கொண்ட புத்தர் சிலை உடைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு உடப்பு பகுதியினை சேர்ந்த 33 வயதுடைய ஒருவர் கொக்குளாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .
மேலதிக விசாரணையினை கொக்குளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின் றார்கள்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.