இலங்கையின் தமிழ் - சிங்கள மெல்லிசை, சாய் பஜன், பொப்பிசை, திரையிசைப் பாடகரும், இசை ஆசிரியருமான இசையமைப்பாளர் கலாபூஷணம் M.S.செல்வராஜா (85) மாஸ்டர் இன்று (05) காலமானார்.
நீண்ட காலமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக இன்று தொடக்கம் எதிர்வரும் 7 திகதி வரை கொழும்பு - பொரள்ளை ஜெயரட்ன மலர்சாலையில் வைக்கப்படவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் இறுதி ஊர்வலம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலாபூஷணம் M.S.செல்வராஜா இலங்கையில் முன்னணி இசையமைப்பாளராக தமிழ் மற்றும் சிங்கள மொழியில் பல மெல்லிசைப் பாடல்களையும் இசையமைத்துள்ளார்.
“அவள் ஒரு ஜீவநதி” என்ற இலங்கையின் தமிழ்த் திரைப்படத்திற்கும், “கேசர சிங்கயோ” என்ற சிங்களத் திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.