சந்தேகநபரைக் கைதுசெய்ய முற்பட்டபோது பொலிஸார் மீது அவர் கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளார். பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயன்றபோது துப்பாக்கியும் இயங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் விசுவமடுவில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றுக்காலை 7 மணிக்கு இடம்பெற்றுள்ளது. தர்மபுரம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார் இருவர் சிவில் உடையில் வந்து, சந்தேகநபர் ஒரு வரை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்துக் கைது செய்ய முயன்றுள்ளனர். ஆனால் எதிர்பாராத வகையில் சந்தேகநபர் கத்தியால் பொலிஸார் மீது
தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றுள்ளார். அவர் சிறிது நேரத்தில் திரும்பி வந்து தனது மோட்டார் சைக்கிளை எடுத்துச்செல்ல முயன்றபோது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்துள்ளனர். இதன் போது துப்பாக்கி இயங்கவில்லை. இதனால் சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார். அவரைக் கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் தீவிரப் படுத்தியுள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.