தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய காலம் உருவாகியுள்ள நிலையில் இளைஞர், யுவதிகள் சுதந்திரமாக அரசியலில் ஈடுபடக்கூடிய பின்னணியை உருவாக்குதல் காலத்தின் தேவையாகும் - இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் 60 வயது முதல் 90 வயது வரையான 57 பேர் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கின்றனர். நாற்பது வயதுக்கும் குறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 26 மட்டுமே. வயது முதிர்ந்தவர்கள் இந்தச் சூழ்நிலையை இளையோருக்கு உருவாக்கிக் கொடுக்கவேண்டும். அத்துடன் நாட்டில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மிகவும் வரையறுக்கப்பட்ட அடிப்படையிலேயே காணப்படுகிறது. இதனையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.