பாராளுமன்ற அரச நிதிக்குழுவின் தலைமை பதவிக்கு எதிர்க்கட்சிக்கு நம்பிக்கையான உறுப்பினர் ஒருவரை அரசாங்கம் நியமிக்கவேண்டும் என பல தடலைகள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளபோதும் அதனை அரசாங்கம் தட்டிக்கழித்து வருகிறது.
எதிர்க்கட்சியின் ஆதரவு அரசாங்கத்துக்கு தேவையாக இருந்தால் எமது கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.
நிலையியற் கட்டளையின் பிரகாரம் எமக்கு கிடைக்கவேண்டிய தலைமை கிடைக்காவிட்டால் சர்வதேசத்திடம் முறையிட வேண்டிவரும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்ற அரச நிதிக்குழுவுக்கு எதிர்க்கட்சிக்கு நம்பிக்கையான ஒருவரை நியமிக்குமாறு எதிர்க்கட்சியிக் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாமல் இருப்பது தொடர்பாக வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.