புதியவன்.
11 அலுவலக தொடருந்து பயணங்கள் இன்று செவ்வாய்க்கிழமை(16) காலை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து பணிமனை தெரிவித்துள்ளது. தொடருந்து ஓட்டுநர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பணிக்கு சமூகமளிக்காத காரணத்தினால் தொடருந்து பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து பணிமனை தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் கொழும்பு கோட்டையிலிருந்து மொரட்டுவ, பாணந்துறை, வாத்துவ, நீர்கொழும்பு, அம்பேபுஸ்ஸ, பாதுக்கை மற்றும் ராகம ஆகிய பகுதிகளுக்கான தொடருந்து பயணங்களும் அந்த தொடருந்து நிலையங்களில் இருந்து மீண்டும் கோட்டை தொடருந்து நிலையங்களுக்குச் செல்லும் தொடருந்துக்களுமே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளன. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.