பரந்துபட்ட கூட்டணி விரைவில்; முஸ்லிம் காங்கிரஸ் தெரிவிப்பு
(ஆதவன்)
இந்த ஆண்டில் அரச தலைவர் தேர்தலில் பரந்துபட்ட கூட்டணி ஒன்றை உருவாக்குவது தொடர்பில் ஆழமாக சிந்தித்து வருகின்றோம். மே அல்லது ஜூனில் இறுதி நிலைப்பாட்டை வெளிப்படுத்துவோம்.
-இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பெரும்பான்மைக் கட்சி என்ற வகையில் இந்தத் தேர்தலில் காத்திரமான தீர்மானங்களை எடுக்கவேண்டிய தார்மீகக் கடமை எமக்குள்ளது.
நாம் தற்போது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் பங் காளியாக உள்ளோம். எனினும் தேர்தல் களத்தில் மும்முனைப் போட்டியொன்று ஏற்படும் பட்சத்தில் வரப்போகின்ற விளைவுகள் பற்றித் தீவிரமாகக் கவனம் செலுத்தியுள்ளோம்.
ஏற்கனவே சிறுபான்மை தேசிய இனங்களின் பல்வேறு விடயங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அத்துடன் நாட்டின் நிலைமைகளை மாற்றவல்ல நிதியுதவிகளையும், உள்நாட்டு மேம்படுத்துவதற்கான வழிகளையும் கண்டறிய வேண்டும்.
இவ்விதமான விடயங்களையெல்லாம் வெளிப்ப டைத்தன்மையுடன் கையாளக்கூடிய தலை மையே நாட்டுக்கு அவசியமாகின்றது என்றும் குறிப்பிட்டார்.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.