காதர் மஸ்தான் கூறுகிறார்
(ஆதவன்)
அரச தலைவர் தேர்தலுக்காக தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியம் இல்லை என்ற முடிவை தமிழ்க் கட்சிகள், புத்திஜீவிகள் எடுப்பார்கள் என எண்ணுகின்றேன் - இவ்வாறு கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கே.கே.மஸ்தான் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது-
அரச தலைவர் தேர்தலுக்கான தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டு வெற்றி அடைவார் என்றால் பரவாயில்லை. ஆனால் அரச தலைவர் தேர்த லைப் பொறுத்தவரை தேசியக் கட்சியைச் சார்ந்த ஒருவரே வெற்றி பெறுவார். எங்களைப் பொறுத்த வரை நாங்கள் ஆதரிக்கின்ற அரச தலைவரை வெற்றியடைய வைப்பதற்கான முயற்சிகளை எடுப்போம்.
மேலும் தமிழ்த் தரப்பில் பொதுவேட்பாளர் என்ற விடயம் என்பது எந்த விதத்தில் சாத்தியம் அல்லது இதன் ஊடாக என்ன நன்மை கிடைக்கும் என்று எமக்குத் தெரியவில்லை - என்றார்.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.