(ஆதவன்)
பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்ட இயற்கைப்பேரிடரை முன்கூட் டியே அறிவிக்கும் ராடர் பொருத்தும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. புத்தளத்திலும், பொத்துவிலிலும் இயற்கைப்பேரிடர் தொடர்பாக முன்கூட்டியே அறிவிக்கும் பொருட்டு ராடர்கள் பொருத்தும் திட்டம் ஜப்பானிய அரசின் உத வியுடன் 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 523.78 மில்லியன் ரூபா திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
370.161 மில்லியன் ரூபா செலவிடப்பட்ட நிலையில் பொருள்களின் விலை அதிகரிப்பை காரணம் காட்டி திட்டம் இடை நடுவில் நிறுத்தப்பட்டுள்ளது. ராடர்களை அமைப்பதற்கான இடத்தைத் தெரிவு செய்வதில் காணப்படு கின்ற இழுபறியும் திட்டம் இடை நடுவில் கைவிடப்பட்டமைக்கான காரணங்களில் ஒன்றாகும். இப்போது புத்தளத்தில் ஒரு ராடரை மட்டும் பொருத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கொங்கொலவில் 420 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்ட ராடர் திட்டமும் 12 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் பூர்த்தியாக்கப்படவில்லை. இதற்குரிய ராடர் அமெரிக்க நிறுவனத்தால் அன்பளிப்புச் செய்யப்பட்டி ருந்தது. மண்ணின் மாதிரியை பரிசோதிக்காமல் ராடர் அமைக் கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதனால் ராடர் அமைக்கும் உபக ரணங்கள் சேதமடைந்து விட்டன. சேதமடைந்த உபகரணங்கள் திருப்பி அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இதற்கு இழப்பீடு கோருவதும் சாத்தியமற்றது என தேசிய கணக்காய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.