இத்தாலியில் முக்கிய வங்கிகளில் இடம்பெற்ற சைபர் தாக்குதல்களுக்கு ரஷ்யாவை சோர்ந்த 'Noname057' ஹேக்கர்கள் குழு பொறுப்பேற்றுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில் குறிப்பிட்ட சொப்ட்வேர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட கணினிகள் ஹேக்கர்களால் முடக்கப்பட்டதால் நாட்டின் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சைபர் தாக்குதல், எம்.பி.எஸ் வங்கி, பி.பீ.ஈ.ஆர் வங்கி, சோன்ட்ரியோ வங்கி, பின்கோ வங்கி, செ வங்கி உள்ளிட்ட 5 முக்கிய வங்கிகளின் இடம்பெற்றதால் ஒரே நேரத்தில் இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் இணையச் சேவையும் முடக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கம் காரணமாக வங்கி சேவைகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளன.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.