இன்றையதினம் இலங்கைப் படகு ஒன்று இந்தியா கோடியக்கரையில் கவிழ்ந்த நிலையில் வேதாரண்யம் கடலோரத்தில் இந்திய பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கோடியக்கரை, பம்ப் ஹவுஸ் பகுதிக்கு மேற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் கடலில் சுமார் 75 மீட்டர் தொலைவில் மிதந்து சென்ற நிலையில் இந்திய மீனவர்களின் உதவியுடன் இந்திய கடலோர பாதுகாப்பு பொலிஸார் கரைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.
மேற்படி படகினை சோதனை செய்ததில் , படகு எண் OFRP -A-0454 KCH என தெரியவந்ததாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படகின் மேல் பாகம் நீல நிறமாகவும், அடிபாகம் காவி மற்றும் வெள்ளை நிறமும் கொண்டதாக உள்ளது எனவும் படகில் வேறு எந்த பொருட்களும் இல்லை எனவும் கூறப்படுகின்றது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.