2023 ஐசிசி ஒருநாள் உலக கோப்பை இறுதி போட்டியில், முதலில் களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. இதனால் அவுஸ்திரேலியாவிற்கு 241 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்கை அடைய களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி, அதிரடியாக விளையாட்டைத் தொடங்கியது. முடிவில் இந்தியா நிர்ணயித்த 241 ரன்களை அவுஸ்திரேலியா எட்டியது.
அதன்படி, அவுஸ்திரேலியா அணி 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மட்டுமன்றி, இந்திய அணி வீரர்களும் கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்கள்.
இந்த போட்டிக்குப் பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரரும் அவுஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டருமான க்ளென் மேக்ஸ்வெல்லுக்கு, விராட் கோலி வாழ்த்து தெரிவித்த தனது ஜெர்சியை பரிசாக அளித்து, ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து கைகுலுக்கிக்கொண்டனர்.
தற்போது விராட் கோலி தனது கையெழுத்திட்ட ஜெர்சியை க்ளென் மேக்ஸ்வெல்லுக்கு பரிசாக அளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.