தாய்ப்பால் அருந்திவிட்டு உறங்கிய மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது .
இச்சம்பவம் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை மேற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கிருஷ்ணகுமார் ஹரிஹரன் என்ற மூன்று மாதக் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
நேற்றுமுந்தினம் காலை தாய்ப்பால் அருந்திய பின் ஏணையில் இடப்பட்டது. சிறிது நேரத்தின் பின் குழந்தை அசைவின்றி இருப்பதை அவதானித்த பெற்றோர் குழந்தையை சங்கானை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த குழந்தையை பரிசோத்தித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக அறிக்கையிட்டனர்.
இது தொடர்பான இறப்பு விசாரணைகளை வலிகாமம் கிழக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.