தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணப் பொலிஸாரால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை தாக்கல் செய்த வழக்கை யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பிரதிவாதிகளாக 6 பேரின் பெயர்கள் குறிக்கப்பட்டு பொலிஸார் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.
தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினரான திலீபனை நினைவுகூறும் நிகழ்வு இலங்கை சோசிலிச குடியரசின் வர்த்தமானி 1721/2ஐயும், 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான தேசிய ஒருமைப்பாடுகள் சட்டத்தையும் மீறுவதாகவும் உள்ளது என்றும் நடத்தப்படும் பேரணியை 1979 ஆம் ஆண்டு 15ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைக்கோவைச் சட்டத்தின் கீழ் தடை செய்ய வேண்டும் என்றும் பொலிஸார் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று புதன்கிழமை காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வழக்கில் எதிர் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி சுகாஷ் ஆஜராகினார். குறித்த இவ்வழக்கை தள்ளுபடி செய்வதாக யாழ் நீதிவான் நீதிமன்ற நீதிவான் தெரிவித்தார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.