மன்னார்- நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காடு காட்டுப்புதுக் குடியிருப்புப் பகுதியில் டிப்பர் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் டிப்பர் சாரதி மற்றும் உதவியாளர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் உயிரிழந்தவர் நானாட்டான் பிரதேசத்தில் இராசமடு சாளம்பன் பகுதியில் வசிக்கும் 55 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான நடராசா ஞானசேகரம் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.