காய்ச்சலுக்காக வைத்தியசாலைக்கு சென்று தனது ஒரு கையினை பறிகொடுத்த சாண்டில்யன் வைஷாலி மீண்டும் இன்று கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலை திரும்பியுள்ளார்.
இன்று சாண்டில்யன் வைஷாலி பாடசாலைக்கு சமூகம் தந்த போது சக மாணவர்கள் ஆசிரியர்கள் அவரை பூங்கொத்து வழங்கி வரவேற்றுள்ளனர். கையை இழந்து சென்ற சிறுமிக்கு இது உண்மையில் மிகப் பெரும் நம்பிக்கையாகவே அமைந்திருக்கும்.
எட்டு வயதுடைய சாண்டில்யன் வைஷாலி காயச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவருக்கு கனூலா வாயிலாக மருந்து ஏற்றப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. கனூலா ஏற்றப்பட்ட பகுதியில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக வைஷாலியின் இடது கையின் ஒரு பகுதி அகற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறுமி வைஷாலியின் பெற்றோரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
துண்டிக்கப்பட்டுள்ள சிறுமியினுடைய கையின் ஒரு பகுதியை கொழும்பிற்கு அனுப்பி விசாரணைகளை முன்னெடுக்குமாறும் யாழ் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.