குவைத்தில் நீண்ட காலமாக வீசா இன்றி நாடு திரும்ப முடியாமல் இருந்த 31 இலங்கையர்கள் குவைத் இலங்கை தூதரகத்தின் தலையீட்டில் தற்காலிக விமான அனுமதியின் கீழ் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று காலை 06.16 மணியளவில் குவைத்தில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-230 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அவர்களில் 03 ஆண்களும் 28 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
கடந்த 12 ஆம் திகதியும் குவைத்தில் இருந்து 9 ஆண்கள், 24 பெண்கள் உட்பட 33 பேர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு வாரங்களில், குவைத்தில் விசா இல்லாமல் தங்கியிருந்த 64 இலங்கையர்கள் அங்குள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டவர்கள் என்பதுடன் அவர்கள் பாதுகாப்பான முறையில் இலங்கைக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.