புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அரசடி வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், கொண்ட நவரத்தினராஜா சபாமணி அவர்கள் நேற்று (07.04.2025) திங்கட்கிழமை இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் - பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற நவரத்தினராஜா அவர்களின் அன்பு மனைவியும், ராஜ்குமார் (USA), Dr..இந்திரநாத் (யாழ். போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு தாயாரும், சர்வானந்தன், காலஞ்சென்றவர்களான பங்கயச்செல்வி, சபாராணி, காந்திசொருபன் ஆகியோரின் அன்பு சகோதரியும், தேவா (USA), Dr. கவிதா ( யாழ். போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மாமியும், தயானி;, சச்சின், ஓவியா ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (08.04.2025) செவ்வாய்க்கிழமை முற்பகல் 09.00 மணியில் அவரது இல்லத்தில் நடைபெற்று புதவுடல் தகனக் கிரியைக்காக முற்பகல் 11.00 மணியளவில் கோம்பயன் மணல் இந்துமாயனத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்;, நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
077 209 6123
91/1A, அரசடி வீதி,
யாழ்பாணம்.