வட்டு தெற்கு, வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் தவநாயகி அவர்கள் (26.04.2025) சனிக்கிழமை சிவபதமடைந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லத்துரை, பாறுப்பிள்ளை தம்பதியினரின் அருமை மகளும் பாலசுப்பிரமணியத்தின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம், சுந்தரலிங்கம், தெய்வநாயகி, குணநாயகி, செல்வநாயகி, சௌந்தர்நாயகி, லோகநாயகி, தையல்நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும் காலஞ்சென்ற பொற்கொடியின் அன்பு மருமகளும் பிறேமலதா செல்வறசி மற்றும் குகதாஸ், தரைஞ்சினி, காலஞ்சென்ற குகசீலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் சண்முகநாதன், சுதர்சன், கிரிதரன், நிலாந்தி, ஸ்ரீரங்கன் ஆகியோரின் மாமியாரும் சாயிந்தன், ஹரிசன், சன்ஜே, அபிநயன், ருக்ஷிகன், அக்ஷயன், ஹரினி அகியோரின் பேர்த்தியாரும் தெய்வநாயகி, பராசக்தி, பார்வதிப்பிள்ளை, திருஞானசம்பந்தர், காலஞ்சென்ற அன்னலக்சுமி மற்றும் மாணிக்கவாசன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் (27.04.2025) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் திருநெல்வேலி வடக்கில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக செம்பாட்டு மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
076 861 6110
173, ஆடியபாதம் வீதி,
திருநெல்வேலி வடக்கு