(விவாக இறப்பு, பிறப்பு பதிவாளர் உரிமையாளர் சபேஸ் ரேடர்ஸ்- புத்தூர் சமாதான நீதவான், நிரந்தர தர்மகத்தா உறுப்பினர், யா/சோமாஸ்கந்தக் கல்லூரி- புத்தூர்)
புத்தூர் மேற்கு புத்தூரைச் சேர்ந்த தில்லையம்பலவாணர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் நேற்றுமுன்தினம் (05.05.2025) திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற தில்லையம்பலவாணர் மற்றும் - சிவகாமிப்பிள்ளை தம்பதியரின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ் சென்ற ஜெகநாதன் மற்றும் சோதிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும், சுதாஜினி (ஆசிரியை, யா/சோமாஸ்கந்தக் கல்லூரி, புத்தூர்) அன்புக் கணவரும், துவாரகன், தமிழினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற சம்பந்தன் மற்றும் விமலன் (பணிப்பாளர் வடமாகாணம் காணி சீர்திருத்த ஆணைக்குழு) ஆகியோரின் அன்புச் சகோதரனும், சுகுமார்-ஜெயசிறி (ஜேர்மனி), தற்பரன் (சட்டத்தரணி), Dr.றமிலாதேவி, நளினி, சந்தானலஷ்மி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (07.05.2025) புதன்கிழமை பி.ப 1 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக புத்தூர் கிந்துசிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்
077 780 5394, 077 773 3058
“சந்திரோதயம்”
புத்தூர் மேற்கு, புத்தூர்.