கணேஸ்வரம் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் கோவிற்புலம் தெல்லிப்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புக்குட்டி குகனேஸ்வரன் அவர்கள் நேற்று (13.05.2023) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் அமரர்களான அப்புக்குட்டி நாகம்மா தம்பதியரின் மகனும், அமரர்களான காசியர் சின்னாச்சி தம்பதியரின் மருமகனும், செல்வராணியின் அன்புக் கணவரும், அருள்ராஜ், கவிதா, பகில்ராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், பூபாலசிங்கம், ஸ்ரீகாந்தேஸ்வரி, இராஜேஸ்வரி, ரவிமலர், அமரர் உதயசீலன், கிருபாகரன், அமரர் சத்தியசீலன், ரவீந்திரன் ஆகியோரின் சகோதரனும், தயாநிதி, வாசுகி ஆகியோரின் மாமனாரும், நபிசன், கியூசன் ஆகியோரின் அன்புப் பேரனும், அமரர் பவளம், அமரர் மகேஸ்வரி, அமரர் இராஜேஸ்வரி, நகுலேஸ்வரி, வசந்தாதேவி, அமரர் கனகேஸ்வரி, அமரர் செல்லமுத்து, இரத்தினசிங்கம், பத்மாவதி, தமிழ்ச்செல்வி, றோமலா, இந்துமதி ஆகியோரின் மைத்துனரும், அமரர் பொன்னம்பலம், இராசா, அமரர் கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் சகலரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (14.05.2023) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, பி.ப 12.30 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைக்காக மல்லாகம் கட்டுப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
இறுதிக்கிரியைகள் 14-05-2023 அன்று 12:30 PM மணியளவில் மல்லாகம் கட்டுப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.