கைதடி மேற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் இலங்கையர் ஸ்ரீகுகஞானசோதி (வாத்தியார் அண்ணை) அவர்கள் நேற்று (02.11.2025) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இலங்கையர் (இலங்கை வாத்தியார்) - சின்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - இராசமலர் தம்பதியரின் மூத்த மருமகனும், புவனேஸ்வரி (பவளம் அக்கா) அவர்களின் அன்புக்கணவரும், காலஞ்சென்ற தன்மாவரதரின் (புகையிரத நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி) ஒன்று விட்ட சகோதரனும், கிருத்திகா (அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் - பூநகரி), தினேஷன் (மின் இணைப்பாளர்), விதூஷன் (இலங்கை மேர்ச்சன்ட் வங்கி யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், பாலமுருகன் (அதிபர் யா/அராலி சரஸ்வதி இந்துக்கல்லூரி) அவர்களின்; அன்பு மாமனாரும், அகரனின் பாசமிகு பேரனும், இராஜேஸ்வரி, பரமேஸ்வரி (ஓய்வு நிலை ஆசிரியை பளை/ இந்து ஆரம்பப் பாடசாலை), விக்னேஸ்வரன் (அமெரிக்கா), யோகேஸ்வரி, தியாகேஸ்வரி, ஜெகதீஸ்வரி (சி.க.கூ. கிளிநொச்சி), பத்மகுமாரி (சுவிஸ்), சுதாஜினி (ஜேர்மனி), சுதாகரன் (கனடா) ஆகியேரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் இன்று (03.11.2025) திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில்; நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக பிற்பகல் 02.00 மணியளவில் ஊரியான் ஜவினைப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்.
077 291 1259
விதூஷன் - மகன்