(புதியவன்)
புதிய தூதுவர், அமைச்சின் செயலாளர் மற்றும் இரு நிறுவனங்களின் தலைவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றத்தில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இத்தாலி குடியரசின் புதிய இலங்கைத் தூதுவராக எஸ்.ஏ.ரொட்றிகோவின் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி கிடைத்தது.
அத்துடன், நீர் வளங்கள் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளராக ஏ.சி.எம். நஃபீல் அவர்களின் நியமனத்துக்கும் இங்கு அனுமதி வழங்கப்பட்டது.
பிரதேச அபிவிருத்தி வங்கியின் புதிய தலைவராக டபிள்யூ.ஏ.டி.எஸ்.குணசிங்கவின் நியமனத்துக்கும், இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் தலைவராக என்.கே.எஸ்.ஜயசேகரவின் நியமனத்துக்கும் உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவில் அமைச்சர்களான மருத்துவ கலாநிதி ரமேஷ் பத்திரன, விதுர விக்கிரமநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஷாத் பதியுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.