உலக நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உயர் பொறுப்புகளில் பணியாற்றிய எம்.எஸ் சுவாமிநாதன் தனது 98 வது வயதில் இன்று இந்தியாவில் சென்னையில் காலமாகினார்.
பசி பட்டினியை ஒழித்து மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை வழங்குவதை நோக்காகக் கொண்டு பல தசாப்தங்களாக பணியாற்றிய விவசாய அறிவியலாளர் இவராவார்.
அவர் ஆற்றிய பங்களிப்பு காரணமாக உலக நெல் ஆராய்ச்சி நிறுவனம் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி பேரவை உட்பட்ட பல ஆய்வு நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் அவர் பணியாற்றியிருந்தார்.
சமூகத் தலைமைக்கான ராமன் மகசேசே விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் உட்பட்ட விருதுகளுக்கு சொந்தக்காரர் இவராவார்.
அன்னாரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் இன்று வைக்கப்பட்டுள்ளது.
இந்திய முதலமைச்சர் ஸ்டாலின், குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமர் நரேந்திரமோடி ஆகியோரும் தமது இரங்கல்களை வெளியிட்டுள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.