இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரையும் இந்தமாதம் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நெடுந்தீவு அருகே இவர்கள் மீன்பிடியில் ஈடுபட்ட போது ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினரால் மூன்று படகும் அதிலிருந்த 12 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையில் 12 மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.