(புதியவன்)
ஜனவரி 2023 இல், அயோத்தியில் இராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்குப் பிறகு, இந்திய சுற்றுலாவிகள் அதிகம் இலங்கைக்கு வருகை தந்தனர். இவ்வாறாக ஜனவரி 2023 இல் இலங்கைக்கு வருகை தந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலாவிகள் முதலிடம் பிடித்துள்ளனர். இவ்வாறாக இந்திய சுற்றுலாவிகளை ஈர்க்கும் முகமாக இலங்கையும் இராமாயண பாதையில் செயல்பட்டு வருவதாக இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இந்தியாவின் மும்பையில் தெரிவித்தார்.
மேலும் இராமாயணப் பாதையை அபிவிருத்தி செய்வதன் மூலமும் தாய்லாந்துடன் இணைந்து பௌத்த சுற்றுவட்டத்தை நிறுவுவதன் மூலமும் சுற்றுலாத்துறை மேம்படும் குறிப்பாக அகமதாபாத்தில் இருந்து வானூர்தி தொடர்பை அதிகரிப்பது மற்றும் இந்திய ஆசிரமங்களுடன் கூட்டு முயற்சிகள் ஆகியவை இவற்றுள் அடங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இதனூடாக பசுமை ஆற்றல் முயற்சிகளில் நெருங்கிய ஆதரவை வழங்குதல் மற்றும் ஒத்துழைப்பில் பிரதிபலிக்கும் வகையில் வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை நாடுகள் பகிர்ந்து கொள்ள முடியும் எனவும் கூறப்பட்டது.
சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த இலங்கை திட்டமிட்டுள்ளது, இதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்களை பிரபல்யப்படுத்தும் தூதுவர்களாக கொண்டுவர நாடியுள்ளது. அத்தோடு அனுமதிகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் திரைப்படத் தயாரிப்புகளை ஈர்ப்பதையும் அரசாங்கம் ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இலங்கை நிறுவனங்கள் இந்தியாவை ஒரு ஏற்றுமதி மையமாக மையமாக வைத்துக் கொண்டு சுற்றுலாத்துறையையும் தம்மையும் வளர்த்துக் கொள்ளவும் இங்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.