(புதியவன்)
ராவணா எல்ல பிரதேசத்தில் எல்ல பாறையில் இருந்து தவறி விழுந்து காயங்களுக்கு உள்ளான 32 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த நபர், மற்றுமொரு நண்பருடன் நேற்று காலை எல்ல பாறையில் ஏற ஆரம்பித்து, மாலைவேளை பாறையில் ஏறும் போது பள்ளத்தில் விழுந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த இவர், வெல்லவாய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் எல்ல காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.