ஆதவன்
ஊசி மூலமான போதைப்பொருள் நுகர்வின் காரணமாக, யாழ்ப்பாண இளைஞர்களிடத்தில் குறிப்பாக 17 தொடக்கம் 25 வயதுடையவர்களில்" இருதய வால்வில் கிருமித்தொற்று ஏற்படுகிறது என்றும், இதனால் இருதயம் செயலிழப்பது அதிகரித்துள்ளது என்றும் மருத்துவத்துறையினர் எச்சரித்துள்ளனர். ஊசிமூலம் போதைப்பொருளை நுகர்வதால் எய்ட்ஸ் தொற்று இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கின்றது அல்லது அதிகரிக்கும் அத்தனை ஏதுநிகைளும் ஏற்பட்டிருக்கின்றது என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வட்டாரங்கள் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் அதிர்ச்சித் தகவலொன்றை வெளியிட்டிருந்தன. இந்தத் தகவல் வெளிப்பட்டு, ஓரிரு நாள்களில் அதே சாரப்பட்டதான இருதயநோய் தொடர்பான எச்சரிக்கையும் வெளிவந்திருக்கிறது. இவ்விருதகவல்களையும் வைத்து அச்சமடைந்தாலும் 'பதற்றமடைந்தாலும், அதில் ஆச்சரியத்துக்கு ஒன்றுமே இல்லை என்பதுதான் உண்மை.
வடக்கு மாகாணத்தில், குறிப்பாகயாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு ஆட்படுவது சாதாரணமான விடயமாக இன்று மாறிவிட்டது. சிறுவர்கள், யுவதிகள், இளைஞர்கள் என எந்தவொரு வயதுப் பிரிவையும் 'சமூகப் பிரிவையும் போதை மிக இலாவகமாக இரையாக்கி நகர்ந்து கொண்டிருக் கின்றது. சமூகச் சீரழிவுகள், கலாசாரச் சீரழிவுகள் என போதையின் பிடியில் நின்று உழலும் இளைஞர் களையும், யுவதிகளையும் மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்புகின்ற போதிலும், எந்த வொரு காத்திரமான முன்னேற்றமும் ஏற்பட்டதாகவில்லை. ஏனெனில், போதையைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் திட்டங்களைவிடவும், போதை இளைஞர்களிடத்தில் பரவும் வேகம் அதிகரித்துள்ளது. மட்டுமல்லாமல் மறுவாழ்வுக்கு உட்பட்டோர்கூட மீண்டும் மீண்டும் போதையின் பாதையில் பயணிக்கத் தலைப்படுவது பதிவுகளாக அமைந்திருக்கின்றன.
போதைப்பொருள் பாவனை எவ்வளவுக் கெவ்வளவு சமூக மயப்படுகின்றதோ அவ்வளவுக்கவ் வளவுநாட்டின் அத்தனைதுறைகளும் நெருக்கடிக்குள் தள்ளப்படும். சுகாதாரத்துறை மட்டும் இதற்கு விதி விலக்கல்ல. இன்னும் சொல்லப்போனால், சுகாதாரத் துறையின் முழுமையான சரிவுக்கு போதையின் அதீத ஊடுருவல் ஒரு காரணமாக அமையும். ஆதலால், மேற்குறிப்பிட்ட செய்திகளும் தகவல்களும் இத்துடன் முற்றுப்பெறும் விடயமல்ல. இன்னும் வெளிப்படையாகச் சொல்வதாயின் இதுவொரு ஆரம்பப்புள்ளி.
எந்தவொரு நாட்டில் போதைப்பொருள் தலைவிரித்தாடுகின்றதோ அங்கு மருத்துவத்துறைக் கான நிதியொதுக்கீடுகள் அதிகரிக்கும். பணம் தண்ணீராகச் செலவாகும். இதுவே யதார்த்தம். கஞ்சாவைச் சட்டபூர்வமாக்கிய உருகுவே, இன்று கஞ்சாவைவிற்றுக் காசாக்கியதை விடவும் கூடுதலான நிதியை போதையால் பாதிக்கப்பட்டோரின் மருத்துவத் தேவைக்காகச் செலவிட்டுக் கொண்டிருக் கின்றது.இதனால்தான் அந்த நாடும், கிட்டத்தட்ட அதேபோன்றதான கொள்கையை உடைய தென்ன மெரிக்கக் கண்டமும் அபிவிருத்தியை அடைந்து விடவில்லை. ஆதலால், இலங்கையில் கட்டற்று ஊடறுத்துத் திரியும் போதைப்பொருள், மருத்துவத்துறையை ஆட்டம்காணச் செய்வதுடன், கஜானாவையும் காலிசெய்யும். இது தொடர்பான தகவல்கள் இனிவரும் காலங்களில் அடுத்தடுத்து அணிவகுத்துவரும். எடுக்கப்படும் எதிர்ப்பு தடுப்பு நடவடிக்கைகளைப் பொறுத்து அதன் 'அடைவு காலம்' வித்தியாசப்படும், அவ்வளவே. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.