(யோகி)
கிளிநொச்சியில் நேற்றிரவு 11 மணியளவில் சிறிய மகிழுந்து ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட (27) நான்கு கிலோ 170 கிராம் தங்க கட்டி மீட்கப்பட்டதுடன் மகிழுந்தில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து ஏ9 வீதி வழியாக வவுனியாவுக்கு குறித்த மகிழுந்தில் மேற்படி எடையுடைய தங்கம் கடத்தப்படுவது தொடர்பாக இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த சிறப்பு தகவல்களின் அடிப்படையில் உடனடியாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்துக்கு அண்மையில் வைத்து வாகனத்தை சோதனையிட்ட சிறப்பு அதிரடிப்படையினர் குறித்த தங்கத்தை மீட்டதுடன் சந்தேகத்தின் பெயரில் மகிழுந்தில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட மூவரைக் கைது செய்துள்ளனர்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.