முல்லையின் எல்லைக்கு வந்த பிரான்ஸ் குழு
முல்லையின் எல்லைக்கு வந்த பிரான்ஸ் குழு

(செல்வன்)

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்களில் உள்ள மருத்துவ தேவைகளுக்கு உதவுவதற்கு  பிரான்ஸ் நாட்டின்  மாநகராட்சி உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட குழுவினர் முன்வந்துள்ளனர்

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அண்மையில் பயணம் மேற்கொண்ட பிரான்ஸ் நாட்டின் மாநகராட்சி உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட மருத்துவக் குழு ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று அங்குள்ள மருத்துவத் தேவைகள் குறித்து   ஆராய்ந்துள்ளனர்.

முல்லைத்தீவில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதேனும்  உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இங்கு வருகை தந்ததாகவும்  இங்கு   உள்ள மருத்துவ தேவைகள் தொடர்பில் ஆராய்ந்ததோடு இவர்களுக்கான தொடர்ச்சியான உதவிகளை எவ்வாறு செய்யலாம் என்பது தொடர்பான அரச தரப்பு பிரதிநிதிகள் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரோடும் கலந்துரையாடி சில மருத்துவ உதவி பொருட்களை வழங்கி வைத்ததோடு தொடர்ச்சியாக இந்த மக்களுக்கான மருத்துவ தேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக  குழுவினர் தெரிவித்துள்ளனர் 

 

தங்களுக்கு இந்த மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருப்பதாகவும் அதனை அடிப்படையாகக் கொண்டே தாங்கள் இங்கு வருகை தந்து ஒரு வார காலம்  முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கும் சென்று பல்வேறு தரப்பினரை சந்தித்து செல்வதாகவும் தொடர்ந்தும் இந்த மக்களுக்கான உதவிகளை தாங்கள் செய்வதற்கு எண்ணி இருப்பதாகவும் அதை தொடர்ச்சியாக  செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.(ப)

#eelamnews #newsupdate #Uthayanpaper #sudaroli #sanjeevi #uthayannews #jaffnauthayan

57 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.