(புதியவன்)
'உதயன்' பத்திரிகையின் அலுவலகச் செய்தியாளராகப் பணியாற்றிய காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட செ.ரஜிவர்மனின் 17ஆவது ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
ஏ-9 வீதி மூடப்பட்டு குடாநாட்டில் இளைஞர்கள் வெள்ளைவானில் ஒட்டுக்குழுக்களால் கடத்தப்பட்டும் சுட்டுக்கொல்லப்பட்டதுமான 2007ஆம் ஆண்டு காலப் பகுதியிலேயே, அதி உயர் பாதுகாப்பு பிரதேசமாக இருந்த ஸ்ரான்லி வீதியும், இராசாவின்தோட்டப் பகுதியும் சந்திக்கும் இடத்தில் வைத்து ரஜிவர்மன் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
ரஜிவர்மனின் 17ஆவது ஆண்டு நினைவுநாள் நினைவுகூறப்படும் இன்றைய நாள் (29) உதயன் பணிமனையிலும் அவருக்கான அஞ்சலி இடம்பெற்றது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.