மாதவன்.
மானிப்பாய் வீடொன்றின் குளியலறையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை(29) மீட்கப்பட்டுள்ளது.
கல்லூரி வீதி, மானிப்பாயைச் சேர்ந்த இராசநாயகம் சிவகுமார்(வயது 60) என்பவரே இவ்வாறு அவரது வீட்டு குளியலறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று காலை குறித்த நபரின் வீட்டுக்கு வேலைக்கு சென்றவர்கள், குறித்த நபர் குளியலறையில் சடலமாக இருப்பதை அவதானித்த நிலையில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
மானிப்பாய் பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சடலம் மீதான இறப்பு விசாரணைகளை இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொள்ளவுள்ளார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.