மாதவன்.
புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அருகாமையில் நின்ற மரத்தின் கிளைகளை வெட்டியவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் திருநெல்வேலி கலாசாலை வீதியைச் சேர்ந்த செல்லமுத்து சிவலிங்கம்(வயது 62) என்ற 5 பெண் பிள்ளைகளின் தந்தை ஆவார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்;
குறித்த நபர் கீழே விழுந்து உயிரிழந்த பின்னர் அவரது சடலம் அச்சுவேலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சடலம் மீதான இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்த்கக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.